search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஓ.ஏ.மங்களம் அருகே மணல் கடத்தியவர் கைது

    ஓ.ஏ.மங்களம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
    சுங்குவார்சத்திரம்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த ஓ.ஏ.மங்களம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரி வேகமாக வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் திருவள்ளூர் மாவட்டம் புருசை பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் லாரியை கைப்பற்றி டிரைவரான திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த சரவணமூர்த்தி (வயது 46) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×