என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை நகர பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்17 Jun 2020 11:40 AM GMT (Updated: 17 Jun 2020 11:40 AM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சிலர் கடைகளை திறந்து வைத்து இருப்பதாகவும், தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாடுவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் திடீர் ஆய்வு செய்து, விதியை மீறி 9 மணிக்கு மேல் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, முதலியார் பேட்டை உள்பட நகரப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அண்ணா சிலை அருகே சிலர் இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை நிறுத்தி, எங்கு செல்கிறீர்கள் என்று கலெக்டர் விசாரித்தார். அவர்களிடம் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரியக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் அருண், தானே காரை ஓட்டி சென்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சிலர் கடைகளை திறந்து வைத்து இருப்பதாகவும், தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாடுவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் திடீர் ஆய்வு செய்து, விதியை மீறி 9 மணிக்கு மேல் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, முதலியார் பேட்டை உள்பட நகரப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அண்ணா சிலை அருகே சிலர் இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை நிறுத்தி, எங்கு செல்கிறீர்கள் என்று கலெக்டர் விசாரித்தார். அவர்களிடம் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரியக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் அருண், தானே காரை ஓட்டி சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X