என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
விழுப்புரம் அருகே கர்ப்பிணி - மாணவிக்கு கொரோனா தொற்று
விழுப்புரம் அருகே கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண் திருமணத்திற்கு பின் சென்னையில் வசித்து வந்தார்.
அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அவருடன் 17 வயதுடைய தங்கை மேல்படிப்பு படித்து வந்தார். இதையடுத்து அந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது தங்கையுமான, மாணவியும் சொந்த ஊரான பெரியபாபுசமுத்திரம் பகுதிக்கு வந்தனர்.
தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் அவர்களின் வீட்டுக்கு சென்று கொரோனா நோய் தொற்று உள்ளதா?என்று பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் அவர்களிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கர்ப்பிணி பெண் மற்றும் மாணவியை தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களின் குடும் பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்றும் மருத்துவ குழுவினர் பரிசோ தனை செய்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்தவர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்கள் குடும்பத்தினர் வெளியே வரக்கூடாது என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களை வருவாய் துறையினர் வழங்கினர். சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
வெளியாட்கள் உள்ளே வராதவாறும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாதவாறும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த விழுப் புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கண்டமங்கலம் இன்ஸ் பெக் டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து வந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டதால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேக மாக பரவி வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண் திருமணத்திற்கு பின் சென்னையில் வசித்து வந்தார்.
அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். அவருடன் 17 வயதுடைய தங்கை மேல்படிப்பு படித்து வந்தார். இதையடுத்து அந்த கர்ப்பிணி பெண்ணும், அவரது தங்கையுமான, மாணவியும் சொந்த ஊரான பெரியபாபுசமுத்திரம் பகுதிக்கு வந்தனர்.
தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் அவர்களின் வீட்டுக்கு சென்று கொரோனா நோய் தொற்று உள்ளதா?என்று பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் அவர்களிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கும் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர்களை விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கர்ப்பிணி பெண் மற்றும் மாணவியை தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவர்களின் குடும் பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்றும் மருத்துவ குழுவினர் பரிசோ தனை செய்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்தவர்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது.
அவர்கள் குடும்பத்தினர் வெளியே வரக்கூடாது என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். மேலும் அவர்களுக்கு உணவு பொருட்களை வருவாய் துறையினர் வழங்கினர். சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.
வெளியாட்கள் உள்ளே வராதவாறும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல முடியாதவாறும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த விழுப் புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கண்டமங்கலம் இன்ஸ் பெக் டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து வந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தங்கைக்கு கொரோனா தொற்று உறுதி செய்ப்பட்டதால் அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
Next Story






