என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
புதுவையில் நேற்று வரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய போது புதுவையில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்தது. நாளடைவில் மேலும் பரவ தொடங்கியது.
அதுவும் சென்னை சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று புதுவை திரும்பியவர்களுக்கே கொரோனா தொற்று இருந்தது.
நேற்று மேலும் வட மங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது.
இதனால் நேற்று வரை புதுவையில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 4 பேர் கதிர்காமம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய போது புதுவையில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா அறிகுறி இருந்தது. நாளடைவில் மேலும் பரவ தொடங்கியது.
அதுவும் சென்னை சென்று வந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்று புதுவை திரும்பியவர்களுக்கே கொரோனா தொற்று இருந்தது.
நேற்று மேலும் வட மங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது.
இதனால் நேற்று வரை புதுவையில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் 4 பேர் கதிர்காமம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
Next Story






