என் மலர்
செய்திகள்

கைது
புதுவை அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது
புதுவை அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த ஆரோவில் அருகே கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது27). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே சதீஷ் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பெற்றோர் புதுவை இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை வலுக்கட்டாயமாக சதீஷ் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
புதுவையை அடுத்த ஆரோவில் அருகே கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது27). கட்டிட தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே சதீஷ் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பெற்றோர் புதுவை இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோர் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை வலுக்கட்டாயமாக சதீஷ் பலாத்காரம் செய்ததால் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் ஆரோவில் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.
Next Story






