என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன்கள் கொள்ளை
    X
    செல்போன்கள் கொள்ளை

    புதுவையில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் கொள்ளை

    புதுவை வெங்கட்டாநகரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வெங்கட்டா நகர் விரிவு பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் மதன் (வயது26). இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக செல்போன் கடையை பூட்டி வைத்திருந்தார்.

    தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று செல்போன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தை கண்டு மதன் அதிர்ச்சி அடைந்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து மதன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து செல்போன்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×