என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அமர்நாத் (வயது 22). இவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அமர்நாத், முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் 21 வயது பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு, அந்த பெண்ணை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×