என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லியனூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 5 பேர் கைது

    வில்லியனூர் பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லியனூர்:

    ஊரடங்கு உத்தரவையொட்டி புதுவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் அதனை பயன்படுத்தி வில்லியனூர் பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற ஒரு கும்பலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். ஆனாலும் போலீசாரின் நடவடிக்கையை அலட்சியம் செய்து வில்லியனூர் பகுதியில் சிலர் சாராயம் தொடர்ந்து விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று வில்லியனூர் பகுதியில் தீவிர காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லியனூர்-ஒதியம்பட்டு சாலை அம்பேத்கார் நகரில் சாராயம் விற்ற புதுப்பேட் பகுதியை சேர்ந்த பார்த்தீபன், உத்திரவாகினிபேட்டை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது43) மற்றும் அம்பேத்கார் நகரை சேர்ந்த ராஜேந்திரன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் பத்துக்கண்ணு சந்திப்பு பகுதியில் சாராயம் விற்ற கூடப்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த முருகன் (44), அய்யனார் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×