என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெரு நாய்கள்
    X
    தெரு நாய்கள்

    ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு: தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கால்நடை டாக்டர்

    ஊரடங்கு உத்தரவால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கு டாக்டர் ஒருவர் உணவு வழங்கி வருகிறார்.

    புதுச்சேரி, ஏப்.17-

    ஊரடங்கு உத்தரவால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் யாரும் வெளியில் வராத காரணத்தி னால் உணவு கிடைக்காமா லும், கோடை வெப்பத்தின் தாக்கத்தாலும் பிராணிகள் தவித்து வருகின்றன. இவைக ளுக்கும் சிலர் உணவு வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் கால்நடை டாக்டரான செல்வமுத்து தினமும் 200 நாய் மற்றும் பூனைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். புதுவை பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பொறுப்பு வகிக்கும் செல்வமுத்து கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இருக்கும் கால் நடைகள் மற்றும் தெருவோரப் பிராணிகளான நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளித்து அவற்றின் பசியை போக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் உணவு கிடைக்காமல் பிராணிகள் பட்டினியால் வாடுகின்றன.

    மேலும் கோடை வெப் பம் உச்சத்தில் உள்ளதால் பிராணிகளின் குணாதிசயங் கள் சற்று மாறுபட்டு காணப் படுகிறது. இதனால் நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதனால் ஏற்படும் காயத்தால் பல்வேறு கெட்ட கிருமிகள் உருவாக வாய்ப்பு உள்ளது.

    ஆதலால் பொதுமக்களா கிய நீங்கள் உங்கள் பகுதி யில் வசிக்கும் பிராணிக ளுக்கு உணவு மற்றும் நீர் கொடுப்பதன் மூலம் அவற்றின் பசியை போக்குவ தோடு மனித நலத்தையும் பேணி காக்க முடியும்.

    எங்கள் இயக்கத்தின் சார்பில் தினமும் பிராணிகளுக்கு உணவு அளித்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் தற்போது ஊரடங்கு உத்தரவால் தெருவோர விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.

    ஆதலால் தங்கள் பகுதிகளில் ஏதேனும் விலங்குகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க எங்களின் இயக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.

    Next Story
    ×