என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளி மைதானத்துக்கு மாறிய காய்கறி கடைகள்
Byமாலை மலர்28 March 2020 11:33 AM GMT (Updated: 28 March 2020 11:33 AM GMT)
கொரோனா நோய் பரவலை தடுக்க காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் அமைக்கப்பட்டது.
தாம்பரம்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனினும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட்டை போலீசார் மூடஉத்தரவிட்டனர். இதனால் 2 நாட்களாக மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கவில்லை.
இதையடுத்து நோய் பரவலை தடுக்க காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது.
தாம்பரம் காந்தி சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை தாம்பரம் நகராட்சி கமிஷனர் கருப்பையா ராஜா ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை தாம்பரத்தில் காய்கறி கடைகள் திறந்த வெளியில் பள்ளி மைதானத்தில் செயல்படும் என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனினும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் கூடியதால் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் காய்கறி மார்க்கெட்டை போலீசார் மூடஉத்தரவிட்டனர். இதனால் 2 நாட்களாக மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் இயங்கவில்லை.
இதையடுத்து நோய் பரவலை தடுக்க காய்கறி கடைகளை பிரித்து மேற்கு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள பள்ளி மைதானங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டது.
தாம்பரம் காந்தி சாலையில் உள்ள பள்ளி மைதானத்தில் திறக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளை தாம்பரம் நகராட்சி கமிஷனர் கருப்பையா ராஜா ஆய்வு செய்தார். அப்போது அவர், அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை தாம்பரத்தில் காய்கறி கடைகள் திறந்த வெளியில் பள்ளி மைதானத்தில் செயல்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X