என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Byமாலை மலர்27 Jan 2020 5:52 PM GMT (Updated: 27 Jan 2020 5:52 PM GMT)
அரியலூரில் தேசிய வாக்காளர் தின விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகள் பஸ்களில் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை கலெக்டர் தலைமையில், அனைத்து அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர், வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி, நாடகம் போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டியில் சிறந்த கோலத்திற்கான பரிசுகளையும் கலெக்டர் ரத்னா வழங்கி பாராட்டினார்.
முன்னதாக மூத்த வாக்காளரான அரியலூரை சேர்ந்த பிச்சைக்கு (வயது 91) கலெக்டர் ரத்னா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது, பொறுப்பு) ரவிச்சந்திரன், அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, தனி தாசில்தார் (தேர்தல்) கண்ணன், அரியலூர் தாசில்தார் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகள் பஸ்களில் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை கலெக்டர் தலைமையில், அனைத்து அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர், வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி, நாடகம் போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டியில் சிறந்த கோலத்திற்கான பரிசுகளையும் கலெக்டர் ரத்னா வழங்கி பாராட்டினார்.
முன்னதாக மூத்த வாக்காளரான அரியலூரை சேர்ந்த பிச்சைக்கு (வயது 91) கலெக்டர் ரத்னா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது, பொறுப்பு) ரவிச்சந்திரன், அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, தனி தாசில்தார் (தேர்தல்) கண்ணன், அரியலூர் தாசில்தார் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X