search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
    X
    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கினார்.
    அரியலூர்:

    மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அரியலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் முன்னிலை வகித்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அனைவருக்கும் பொங்கலை பகிர்ந்து, மரக்கன்றுகளை மைதானத் தில் நட்டு வைத்தார். பின்னர் அவர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, அதிலும் பங்கேற்று விளையாடினார்.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். இதையடுத்து கலைக்குழுவினரின் காவடியாட்டம் நடைபெற்றது. இதில் போலீசாரின் குடும்பங்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க செந்துறை ரவுண்டானா பகுதியில் வாகன டிரைவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    Next Story
    ×