என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதற்றமான வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் ரத்னா ஆய்வு
Byமாலை மலர்28 Dec 2019 4:16 PM GMT (Updated: 28 Dec 2019 4:16 PM GMT)
அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நேற்று 522 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி 495 வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பலர் உடனிருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் மற்றும் செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நேற்று 522 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி 495 வாக்குச்சாவடிகளில் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினையும், அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆய்வு செய்தார். மேலும் திருமானூர், செந்துறை ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் தேன்மொழி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X