என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடமாடும் ஆஸ்பத்திரி தொடக்கம்
    X
    நடமாடும் ஆஸ்பத்திரி தொடக்கம்

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி சார்பில் நடமாடும் ஆஸ்பத்திரி தொடக்கம்

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆதிபராசக்தி ஆஸ்பத்திரி போன்றவற்றின் சார்பில் லட்சுமி பங்காரு நடமாடும் ஆஸ்பத்திரி தொடக்க விழா மேல்மருவத்தூரில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது.
    மதுராந்தகம்:

    அதிநவீன வசதிகள் கொண்ட நடமாடும் ஆஸ்பத்திரி குளிர் சாதன வசதி கொண்ட பஸ் ஆகும். இதில் காணொலி காட்சி மூலமாக நோயாளிகள் நேரடியாக சிறப்பு மருத்துவரை தொடர்பு கொள்ள முடியும். இதனை ஆதிபராசக்தி ஆஸ்பத்திரியின் துணைத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரமேஷ், முதன்மை செயல் அதிகாரி சேகர், பல் மருத்துவ கல்லூரி முதல்வர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நடமாடும் ஆஸ்பத்திரி மூலம் மதுராந்தகம், வந்தவாசி, உத்திரமேரூர், வெண்மாலகரம், திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் மருத்துவ வசதியை பெற முடியும். இதனால் ஏழை, எளிய நோயாளிகள் அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை இருந்த இடத்திலேயே பெறலாம்.

    இதில் படுக்கை வசதிகள் அவசரகால சிகிச்சை வசதிகள், பல் மருத்துவ சிகிச்சை அளிக்க சிறப்பு வசதிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கு பயண நேரங்கள் மிச்சப்படும் என ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். 
    Next Story
    ×