search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விருத்தாசலத்தில் இருந்து, சேலம் செல்லும் பயணிகள் ரெயில் அரியலூரில் இருந்து இயக்கப்படும்

    விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயிலை அரியலூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் கூறினார்.
    அரியலூர்:

    அரியலூர் ரெயில் நிலையம் “ஆதார்ஸ்“ ரெயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டுள்ளதையடுத்து ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை நேற்று தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் ஆய்வு செய்தார். இதில் ரெயில்வே மேம்பாலம், பதிவேடுகள், பாதுகாப்பு வழிமுறைகள், பயணிகளின் வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ரூ.18 லட்சம் மதிப்பிலான ரெயில் நிலைய மேலாளர் அறை மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தங்கும் அறை ஆகியவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட பொதுமேலாளர், அவற்றை பரிசீலத்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து ஜான்தாமஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தென்னக ரெயில்வேயில் நடப்பாண்டில் 148 ரெயில்வே கிராசிங்கிற்கு பணியாளர்கள் நியமிக்க உத்திரவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் நிறைவடையும். இப்பணிகள் முடிவுற்றால் தென்னக ரெயில்வேயில் 100 சதவீதம் அனைத்து ரெயில்வே கிராசிங்களும் பணியாளர்கள் உள்ளவையாக மாற்றப்படும். மேலும் நடப்பாண்டில் இரட்டை ரெயில் பாதை திட்டம் மதுரையில் 43 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டிற்கு 74 கிலோ மீட்டர் தூரம் இரட்டை ரெயில்பாதை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு தென்னக ரெயில்வேயில் 5 ரெயில் விபத்துகள் நடைபெற்றது. எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நடப்பாண்டில் ஒரு விபத்து மட்டுமே நடைபெற்றுள்ளது. அரியலூர் ரெயில் நிலையத்தில் அனைத்து சிறப்பு ரெயில்கள் நின்று செல்லவும், விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயிலை அரியலூரில் இருந்து இயக்க வும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உள்பட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அப்போது அவரிடம் அரியலூர் மாவட்ட வணிகர் சங்க தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் ராமலிங்கம், மாவட்ட காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சிவகுமார் மற்றும் பலர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
    Next Story
    ×