search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள்
    X
    விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள்

    இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்-கருத்தரங்கம்

    இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

    பள்ளியில் தொடங்கிய ஊர்வலம், அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலையம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தின்போது, அரசியலமைப்பு தினம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி கோ‌‌ஷமிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர் சேகர் ஆகியோர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவித் தலைமையாசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.
    Next Story
    ×