என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதல் தகராறில் துணிக்கடை ஊழியர் கடத்தல் - 5 பேர் கைது
Byமாலை மலர்9 May 2019 6:32 AM GMT (Updated: 9 May 2019 6:32 AM GMT)
பாலவாக்கத்தில் கள்ளக்காதல் தகராறில் துணிக்கடை ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் சாலமோன். இவர் பாலவாக்கத்தில் உள்ள உறவினரின் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை சாலமோன் கடையில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வெளியே அழைத்து சென்று காரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பல் சம்பவம் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதற்கிடையே சாலமோனை கடத்தி சென்ற கும்பல் அண்ணாநகர் பகுதில் காரில் சுற்றுவது தெரிந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் தீவிர சோதனை நடத்தி காரில் சுற்றிய கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சிக்கி இருந்த சாலமோனை மீட்டனர்.
இது தொடர்பாக காரில் இருந்த வெட்டுவாங்கேனியை சேர்ந்த முகமது ஆரீப், துரைப்பாக்கம் விக்னேஷ், கதிர்வேல், பரத் மற்றும் மஞ்சுளா என்ற பெண் ஆகிய 5பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரிந்தது. சாலமோனுக்கும் வெட்டுவாங்கேனியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.
இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடக்கிறது.
சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் சாலமோன். இவர் பாலவாக்கத்தில் உள்ள உறவினரின் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை சாலமோன் கடையில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வெளியே அழைத்து சென்று காரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பல் சம்பவம் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதற்கிடையே சாலமோனை கடத்தி சென்ற கும்பல் அண்ணாநகர் பகுதில் காரில் சுற்றுவது தெரிந்தது. இதுபற்றி அண்ணா நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் தீவிர சோதனை நடத்தி காரில் சுற்றிய கடத்தல் கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சிக்கி இருந்த சாலமோனை மீட்டனர்.
இது தொடர்பாக காரில் இருந்த வெட்டுவாங்கேனியை சேர்ந்த முகமது ஆரீப், துரைப்பாக்கம் விக்னேஷ், கதிர்வேல், பரத் மற்றும் மஞ்சுளா என்ற பெண் ஆகிய 5பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் இந்த கடத்தல் நடந்து இருப்பது தெரிந்தது. சாலமோனுக்கும் வெட்டுவாங்கேனியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது.
இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக பிடிபட்ட 5 பேரிடமும் விசாரணை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X