search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானலில் தங்கும் விடுதியில் வெளிமாநில பெண்கள் உல்லாசம்
    X

    கொடைக்கானலில் தங்கும் விடுதியில் வெளிமாநில பெண்கள் உல்லாசம்

    கொடைக்கானல் தங்கும் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் இளம்வயது வாலிபர்களை குறிவைத்து சமூகவிரோத கும்பல் போதை காளான், அழகிகளை வைத்து மயக்கி வருகின்றனர்.

    இதனால் அந்த வாலிபர்கள் மீண்டும், மீண்டும் கொடைக்கானலுக்கு இதற்காகவே வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாலிபர்களிடம் பணத்தை கரந்து ஏமாற்றிச்செல்கின்றனர்.

    பாம்பார்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாம்பார் புரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், மார்டின் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விடுதியில் இருந்த வெளிமாநில பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×