search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் நாளை மின்தடை
    X

    ராமநாதபுரத்தில் நாளை மின்தடை

    ராமநாதபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே 5 துணை மின் நிலையங்களில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16-ந்தேதி) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று உதவிச் செயற் பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

    மினி வினியோகம் தடைபடும் பகுதிகள் வருமாறு:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், அரண்மனை, கேணிக்கரை, பாரதி நகர், சக்கரக்கோட்டை, கலெக்டர் அலுவலகவளாக பகுதிகள், பட்டினம்காத்தான், அச்சுந் தன்வயல், சின்னக்கடை மற்றும் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதிகள்.

    ராமநாதபுரம் துணை மின் நிலையத்தில் திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி, ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் ரெகுநாதபுரம், பெரிய பட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனாமரைக்கான்.

    தேவிபட்டினம் துணை மின் நிலையத்தில் காட்டூ ரணி, அண்ணா பல்கலைக் கழகம், தேவிபட்டினம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை.

    ஆர்.காவனூர் துணை மின் நிலையத்தில் முதலூர், கிளியூர், ஆர்.காவனூர், தேத்தாங்கால், குளத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×