என் மலர்
செய்திகள்

லாலாப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
லாலாப்பேட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
லாலாப்பேட்டை:
லாலாப்பேட்டை கெடிக்கால் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (33கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிகளை கடந்த 13-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பிள்ளபாளையத்தை சேர்ந்த செல்வம் (45) என்பவர் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிளை திருடிய செல்வத்தை கைது செய்தனர்.
Next Story






