என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- சென்னையில் பாதிப்பு இல்லை
Byமாலை மலர்15 Oct 2018 5:57 AM GMT (Updated: 15 Oct 2018 5:57 AM GMT)
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. #Rationshop
சென்னை:
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ரேஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் 1200 ரேஷன் கடைகள் உள்ளன. டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சீபுரம் மொத்த கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் கடைகள் உள்ளிட்ட எல்லா நியாய விலைக் கடைகளும் திறந்து இருந்தன. சென்னையில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அத்தியாவசிய பொருட்கள் பாதிப்பு இல்லாமல் வினியோகிக்கப்பட்டன.
சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. டி.யூ.சி.எஸ். சார்பில் நடத்தப்படும் 303 ரேஷன் கடைகள் மட்டுமின்றி சிந்தாமணி கடைகள் 198, நாம்கோ கடைகள் 92, காஞ்சீபுரம் சொசைட்டி கடைகள் 417 என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன என்றார்.
இதற்கிடையில் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளோம்.
ஆனால் இதுநாள் வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த போராட்டம் திடீர் என அறிவிக்கவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை தெரிவித்தும் யாரும் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்காமல் உள்ளனர்.
ஆனால் கடைகளுக்கு பொருட்கள் வந்தஉடன் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இருப்பு குறைவாக உள்ளது என குற்றம்சாட்டி ரேஷன் பணியாளர்களை அடிமைகளாக மாற்றி அவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டும் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rationshop
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ரேஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் 1200 ரேஷன் கடைகள் உள்ளன. டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சீபுரம் மொத்த கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் கடைகள் உள்ளிட்ட எல்லா நியாய விலைக் கடைகளும் திறந்து இருந்தன. சென்னையில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அத்தியாவசிய பொருட்கள் பாதிப்பு இல்லாமல் வினியோகிக்கப்பட்டன.
இதுகுறித்து டி.யூ.சி.எஸ் அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு பிரிவு செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:-
இதற்கிடையில் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளோம்.
ஆனால் இதுநாள் வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்த போராட்டம் திடீர் என அறிவிக்கவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை தெரிவித்தும் யாரும் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்காமல் உள்ளனர்.
ஆனால் கடைகளுக்கு பொருட்கள் வந்தஉடன் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இருப்பு குறைவாக உள்ளது என குற்றம்சாட்டி ரேஷன் பணியாளர்களை அடிமைகளாக மாற்றி அவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டும் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Rationshop
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X