என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவில் விவகாரம் - புதுவையில் பெண்கள் நூதன போராட்டம்
    X

    சபரிமலை கோவில் விவகாரம் - புதுவையில் பெண்கள் நூதன போராட்டம்

    சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை பெண்கள் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala
    புதுச்சேரி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை கோவிந்தசாலை பாரதிபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை பெண்கள் விளக்கு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். #Sabarimala

    Next Story
    ×