என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையில் மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் - பூந்தமல்லி நகராட்சி முன்பு பெண்கள் போராட்டம்
Byமாலை மலர்19 Sep 2018 8:34 AM GMT (Updated: 19 Sep 2018 8:34 AM GMT)
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டைபோல் தேங்கி உள்ளதால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12-வது வார்டுக்குட்பட்ட பாப்பாடி தர்கா, கோரிமேடு 6-வது தெரு, 7-வது தெரு பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்து நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12-வது வார்டுக்குட்பட்ட பாப்பாடி தர்கா, கோரிமேடு 6-வது தெரு, 7-வது தெரு பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்து நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X