என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திரப்பதிவு அலுவலங்களில் டோக்கன் முறை அமல் - 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி
Byமாலை மலர்16 Sep 2018 7:53 AM GMT (Updated: 16 Sep 2018 7:53 AM GMT)
அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் பத்திரங்களை பதிவு செய்யும் டோக்கன் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. #RegistrationOffice
சென்னை:
பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் தற்போது பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று பத்திரப்பதிவுக்கு இனிமேல் காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ளலாம்.
அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தினசரி 50 டோக்கன் கொடுக்கப்படும்.
காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன் வீதம் 30 டோக்கன் அளிக்கப்படும்.
பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை 5 டோக்கனும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கனும், மதியம் 3.30 மணி வரை 5 டோக்கன் என பிரித்து வழங்கப்படும்.
இதில் உள்ள நேரத்தில் சென்று பத்திரங்களை பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அந்த விவரம் அங்குள்ள கம்ப்யூட்டரில் காண்பிக்கப்படும். அதன் பிறகுதான் அடுத்த ஆவண பதிவை தொடர முடியும். இதற்கேற்ப கம்ப்யூட்டரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் அனைத்து முன்பதிவு டோக்கன்களுக்கும் உரிய பதிவு நடைமுறை விரைவாக முடிந்துவிட்டால் அடுத்த நாளில் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களை வரவழைத்து பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #RegistrationOffice
பத்திரப்பதிவு அலுவலகங்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் தற்போது பல்வேறு நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று பத்திரப்பதிவுக்கு இனிமேல் காத்திருக்க தேவையில்லை. முன்கூட்டியே 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ளலாம்.
அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தினசரி 50 டோக்கன் கொடுக்கப்படும்.
காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன் வீதம் 30 டோக்கன் அளிக்கப்படும்.
பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை 5 டோக்கனும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை 10 டோக்கனும், மதியம் 3.30 மணி வரை 5 டோக்கன் என பிரித்து வழங்கப்படும்.
இதில் உள்ள நேரத்தில் சென்று பத்திரங்களை பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்தவர்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் அந்த விவரம் அங்குள்ள கம்ப்யூட்டரில் காண்பிக்கப்படும். அதன் பிறகுதான் அடுத்த ஆவண பதிவை தொடர முடியும். இதற்கேற்ப கம்ப்யூட்டரில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் அனைத்து முன்பதிவு டோக்கன்களுக்கும் உரிய பதிவு நடைமுறை விரைவாக முடிந்துவிட்டால் அடுத்த நாளில் முன்பதிவுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன்களை வரவழைத்து பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #RegistrationOffice
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X