search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூர், சென்ட்ரல் உள்பட 17 துணை மின் நிலையங்கள்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
    X

    போரூர், சென்ட்ரல் உள்பட 17 துணை மின் நிலையங்கள்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

    495 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #TNCM #Edappdipalaniswami
    சென்னை:

    போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    சென்னை- சென்ட்ரல் துணை மின் நிலையம், விருதுநகர் மல்லாங்கிணர் துணை மின் நிலையம், மதுரை ஏழுமலை துணை மின் நிலையம், தருமபுரி மாம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையம்,ஈரோடு சிவகிரி துணை மின் நிலையம்,

    கரூர் ரங்கநாதபுரம் துணை மின் நிலையம், திருவண்ணாமலை அரையாளம் துணை மின் நிலையம், விழுப்புரம் ரெட்டணை துணை மின் நிலையம், கடலூர் சிறுபாக்கம் துணை மின் நிலையம்,

    வேலூர் கரிவேடுதுணை மின் நிலையம், திருநெல்வேலி ரஸ்தா துணை மின் நிலையம், தஞ்சாவூர் இ.பி.காலனி துணை மின் நிலையம், புதுக்கோட்டை பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையம் மற்றும் வல்லவாரி துணை மின் நிலையம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி துணை மின் நிலையம் என மொத்தம் 495 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    தண்டையார்பேட்டையில் 3 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரிமாணவர் விடுதிக் கட்டடம்; பழவேற்காட்டில் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்; சிவகங்கை கிருங்காக்கோட்டையில் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிமாணவர் விடுதிக் கட்டடம்,

    திருவிடைமருதூரில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடம்; சாத்தமங்கலத்தில் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலப் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடம் மற்றும் சாத்தமங்கலத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 120 மாணவர்கள்தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம் என மொத்தம் 8 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்கள் மற்றும் ஒரு கூடுதல் விடுதிக் கட்டடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மதுரை ஆயுதப்படை வளாகத்தில் 16 கோடியே 34 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மணலியில் 50 காவலர் குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 32 காவலர் குடியிருப்புகள் மற்றும் கழுகுமலையில் 6 காவலர் குடியிருப்புகள் என மொத்தம் 10 கோடியே 72 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 88 காவலர் குடியிருப்புகள், ராமநாதபுரம் ஆர் எஸ் மங்கலத்தில் 63 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்; தண்டை யார்பேட்டையில் காவல்துறை இணை ஆணையர் (வடக்கு) நிர்வாகக் கட்டடம் மற்றும் புதுவண்ணாரப்பேட்டையில் காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம், கரூர் ஆயுதப் படைக்கான நிர்வாகக் கட்டடம், திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படைக்கான நிர்வாகக் கட்டடம், என மொத்தம் 15 கோடியே 47 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 காவல் துறை கட்டடங்கள்,

    கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை, தருமபுரி பாலக் கோடு ஆகிய இடங்களில் 1 கோடியே 43 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள் என மொத்தம், 44 கோடியே 61 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், நிதித் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை மற்றும் அரசுத் துறை நிறுவனத் தணிக்கைத் துறை ஆகிய துறைகளில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 215 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். #TNCM #Edappdipalaniswami
    Next Story
    ×