search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் புதுவை கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் புதுவை கலெக்டர் திடீர் ஆய்வு

    புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பொழியும்.

    மழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழையினால் தேங்கும் தண்ணீரால் டெங்கு காய்ச்சல் பரவவும் வாய்ப்புள்ளது.

    இதற்கான விழிப்புணர்வு பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. நகராட்சி சார்பில் காலி மனைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற 15 நாள் கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதுவை கலெக்டர் சவுத்ரிஅபிஜித் விஜய் இன்று காலை திடீரென நெல்லித்தோப்பு மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட், சுற்றுப்புற பகுதிகளை சுற்றிப்பார்த்த கலெக்டர், அங்கிருந்த வியாபாரிகளிடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் சுற்றுப்புற பகுதிகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார்.

    மேலும் தண்ணீர், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நெல்லித்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

    Next Story
    ×