என் மலர்
செய்திகள்

வியாழக்கிழமை வாஜ்பாய் அஸ்தி புதுவை வருகிறது
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை மறுதினம் புதுவை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி புனித நதிக்கரைகள், கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதேபோல் புதுவையிலும் கரைக்கப்பட உள்ளது.
அஸ்தியை பெறுவதற்காக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பெங்களுரூ வழியாக டெல்லி செல்கிறார். அவர் புதுவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை மறுதினம் வாஜ்பாயின் அஸ்தி புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒரு நாள் வைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை முதல்- அமைச்சர், கவர்னர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு நடக்கிறது. தொடர்ந்து அவரது அஸ்தி கடலில் கரைக்கபட உள்ளது.
ரபேல் விமான ஊழல் தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளது பொய்யான குற்றச்சாட்டு. ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் துறை அமைச்சர் ராஜினாமா செய்வார். உலகிலேயே 4 ஆண்டுகள் 1 ரூபாய் கூட ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதா நடத்தி வருகிறது.
இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி புனித நதிக்கரைகள், கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதேபோல் புதுவையிலும் கரைக்கப்பட உள்ளது.
அஸ்தியை பெறுவதற்காக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பெங்களுரூ வழியாக டெல்லி செல்கிறார். அவர் புதுவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை மறுதினம் வாஜ்பாயின் அஸ்தி புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒரு நாள் வைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை முதல்- அமைச்சர், கவர்னர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு நடக்கிறது. தொடர்ந்து அவரது அஸ்தி கடலில் கரைக்கபட உள்ளது.
ரபேல் விமான ஊழல் தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளது பொய்யான குற்றச்சாட்டு. ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் துறை அமைச்சர் ராஜினாமா செய்வார். உலகிலேயே 4 ஆண்டுகள் 1 ரூபாய் கூட ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதா நடத்தி வருகிறது.
இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
Next Story






