search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ் கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 10 பேர் காயம்
    X

    பஸ் கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் உள்பட 10 பேர் காயம்

    காயரம்பேடு கிராமத்தில் இருந்து தனியார் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் காயரம்பேடு கிராமத்தில் இருந்து தனியார் மினி பஸ் கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. காயரம்பேடு பள்ளிக்கூடம் அருகே பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

    பின்னர் சாலை ஓரமாக பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் பஸ் டிரைவரை பிடித்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×