search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது
    X

    மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயருகிறது

    மத்திய அரசு ஊழியர்களின் இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
    சேலம்:

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். விலைவாசி உயர்வின் அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப் படியை 2 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதிக்குள் வெளியாக உள்ளது.

    மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே 7 சதவீதம் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இது 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஜூலை 1-ந் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர்களும் பயன் பெறுவார்கள்.
    Next Story
    ×