என் மலர்
செய்திகள்

சதுர்த்தி விழா - திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகரில் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நாகல்நகரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் யோகேஷ்குமார், மாநில துணை பொது செயலாளர் மலைக்கோட்டை தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.
மாநகர தலைவர் துரைப்பாண்டி, மாநகர இளைஞரணி தலைவர் பிரபு ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் மணிகண்டன், மாநகர மாணவரணி தலைவர் அஜய் சூர்யா மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் மாநகர பொது செயலாளர் குழந்தைராஜ் நன்றி கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி இந்திய அரசும், தமிழக அரசும் தேசிய கொடியை கச்சத்தீவில் ஏற்ற வேண்டும். சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திண்டுக்கல் நாகல்நகரில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் யோகேஷ்குமார், மாநில துணை பொது செயலாளர் மலைக்கோட்டை தர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார்.
மாநகர தலைவர் துரைப்பாண்டி, மாநகர இளைஞரணி தலைவர் பிரபு ரவிச்சந்திரன், மாநகர செயலாளர் மணிகண்டன், மாநகர மாணவரணி தலைவர் அஜய் சூர்யா மற்றும் பலர் பங்கேற்றனர். முடிவில் மாநகர பொது செயலாளர் குழந்தைராஜ் நன்றி கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி இந்திய அரசும், தமிழக அரசும் தேசிய கொடியை கச்சத்தீவில் ஏற்ற வேண்டும். சதுர்த்தியை யொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும் 1000 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






