search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து கிடக்கும் லாரி.
    X
    தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து கிடக்கும் லாரி.

    பெரியபாளையம் அருகே தேங்காய் எண்ணை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

    பெரியபாளையம் அருகே தேங்காய் எண்ணை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பெரியபாளையம்:

    பாண்டிச்சேரியில் இருந்து ஐதராபாத்துக்கு தேங்காய் எண்ணை பாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. விழுப்புரம் மாவட்டம் செர்னாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பிரசாத் (வயது 28). லாரியை ஓட்டினார்.

    பெரியபாளையம் அருகே ஊத்துக்கோட்டை- சென்னை நெடுஞ்சாலையில் ஆத்துப்பாக்கம் கிராமம் அருகே சாலை வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதனால் லாரியில் இருந்த தேங்காய் எண்ணை பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகளில் இருந்த எண்ணை பாக்கெட்டுகள் சாலையின் இரண்டு திசையிலும் சிதறியது. இதனால் சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றது.

    டிரைவர் பிரசாத் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து சேதம் அடைந்த தேங்காய் எண்ணை பாட்டில்கள் மற்றும் அட்டை பெட்டிகளை அப்புறப்படுத்தினர்.

    டிரைவர் பிரசாத்தை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×