என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழக சுகாதார துறைக்கு மத்திய அரசு விருது
சென்னை:
பிரசவத்தின் போது தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவிடம் இருந்து விருதை தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.
பின்னர் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
2015ம் ஆண்டுக்குள் தாய் மார்கள் இறப்பு விகிதத்தை 139 ஆக குறைக்க வேண்டும் என்று மில்லினியம் வளர்ச்சி இலக்கை குறித்த ஆண்டிற்கு முன்னதாகவே தமிழகம் அடைந்து விட்டது.
2030-ம் ஆண்டுக்குள் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை 70-ஆக குறைக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கை 2016-17-ம் ஆண்டின் விவரப்படி தாய்மார்களின் இறப்பு விகிதம் 62-ஆக குறைத்து இமாலய சாதனை புரிந்துள்ளது. இது இந்தியாவின் தாய்மார்கள் இறப்பு விகிதத்தின் சாராசரி அளவான 130-ஐவிட பாதியாகும்.
இச்சாதனையை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு தமிழகத்திற்கு விருது வழங்கி சிறப்பித்தது. குறிப்பாக இந்தியா முழுவதும் மாநிலங்களில் வளர்ச்சி விகிதத்தை கணித்து அறிக்கை அளிக்கும் நிதி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வினோத் பால் தமிழகத்தின் இச்சாதனையை வெகுவாக பாராட்டியது உற்காத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததற்கு மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டாவை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்து நன்றி தெரிவித்தார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை விரைந்து முடிக்கவும் நட்டாவை கேட்டுக் கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்