என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
மன்னார்குடி:
தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ராஜகோபாலனுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு மிக்க திருவிழாவாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி பெருமாள் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கருட உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து ராஜகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி வருகிற 27-ந் தேதி வரை தினமும் ராஜகோபாலசாமி பல்லக்கில் புறப்பட்டு வீதி உலா வந்து, பின்னர் அரித்திராநதி குளம் தென்கரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளுவார்.
அதைத்தொடர்ந்து சூர்யபிரபை, சேஷவாகனம், கருட சேவை, அனுமந்த வாகனம், யானை வாகனம், சூர்னாபிஷேகம், வெண்ணெய்தாழி, குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது. 28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு அரித்திராநதி தெப்பகுளத்தில் ராஜகோபாலசாமி தெப்பஉற்சவம் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்