என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை கொடுக்காத கட்டிட காண்டிராக்டருக்கு அரிவாள் வெட்டு: 3 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்2 Jun 2018 1:31 PM GMT (Updated: 2 Jun 2018 1:31 PM GMT)
திலாஸ்பேட்டையில் வேலைகொடுக்காத ஆத்திரத்தில் கட்டிட காண்டிராக்டரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை திலாஸ்பேட்டை வீமன்நகர் ஓடைத்தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது33) கட்டிட காண்டிராக்டர். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விக்கி உள்பட 3 பேர் கட்டிடத்துக்கு கம்பி கட்டும் வேலை கொடுக்குமாறு கேட்டனர். ஆனால் சகாதேவன் வேலை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் சகாதேவன் மீது அவர்கள் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சகாதேவன் வீமன்நகர் மந்தைவெளி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது விக்கி உள்பட 3 பேரும் சேர்ந்து சகாதேவனை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் வெட்டிவிட்டு தப்பி ஒடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சகாதேவன் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குபதிவு செய்து விக்கி உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X