search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பள்ளி சங்க  கூட்டமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க அன்பழகன் வலியுறுத்தல்
    X

    தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க அன்பழகன் வலியுறுத்தல்

    தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுவை மாநில அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டசபை கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின தவறான கல்விக் கொள்கையால் பள்ளி மாணவர்களும் உயர் படிப்பு கல்வி பயிலும் மாணவர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரி தொடங்கும் போது 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் எனற உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. புதுவையில் உள்ள 4 நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஒரு இடம் கூட எம்.பி.பி.எஸ். பெற முடியாத சூழலையை அரசு திட்டமிட்டு உருவாக்கியது.

    அதே போல் புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 3 மருத்துவ கல்லூரியில் மொத்தம் 115 முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடம் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடங்களுக்கு நாளை அரசின் மூலம் மாஆப் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.

    இதில் புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து அதன் பிறகு அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியிலில் உள்ள மாணவர்களுக்கு சீட் வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு காலம் கடந்து வெளியிட்டது. நிர்வாக கோட்டா முழுவதும் அகில இந்தி மாணவர்களை கொண்டு நிரப்பப்படுவதால் புதுவையை சேர்ந்தவர்களுக்கு ஒரு இடம் கூடம் கிடைக்கப்பெற வாய்ப்பு இல்லை. இந்த நிலை மாற்றப்பட்டு மாஆப் கவுன்சில் நிர்வாக கோட்டாவிற்கு புதுவையை சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்க கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுவையில் சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒரு விளம்பரம் செய்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக நிறைவேற்றாத ஒரே மாநிலம் புதுவைதான். தற்போது கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துள்ள நிலையில் அரசிடம் தங்களது குறைகளை தெரிவிக்காமல் விளம்பரம் செய்துள்ளனர். இது மதரீதியான கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது.

    மேலும், அரசுக்கு சவால் விடும் விதத்திலும் அமைந்துள்ளது. ஆட்சியாளர்கள் ஒருவரின் தூண்டுதல் பேரில் இந்த விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அரசு மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உடனடியாக அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தனியார் பள்ளிகள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். அரசு தங்களின் கோரிக்கைளை ஏற்கவில்லையென்றால் ஜுன் மாதம் முதல் பள்ளிகளை மூடுவோம் என்று அரசுக்கு மிரட்டல் விடுத்த்துள்ளது கண்டிக்கத்தக்கது அவ்வாறு மூடும் பள்ளிகளை அரசு கையகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    Next Story
    ×