என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பென்னாகரத்தில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் பென்னாகரத்தில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704062206595400_Panchayat-Union-office-focused-on-the-drinking-water_SECVPF.gif)
X
பென்னாகரத்தில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
By
மாலை மலர்6 April 2017 4:36 PM GMT (Updated: 6 April 2017 4:36 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
பென்னாகரம் கிராமத்தில் ஒரு மாத காலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனை கடிண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பர்வதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எட்டிக்குட்டை கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
ஒகேனக்கல் குடிநீரும் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் குடிநீர் வழங்கக்கோரி அந்த அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், முற்றுகையில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கிராம மக்களுக்கு தேவையான அளவில் குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பர்வதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எட்டிக்குட்டை கிராமத்தில் 500–க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
ஒகேனக்கல் குடிநீரும் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டால் இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று குடங்களில் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். பின்னர் குடிநீர் வழங்கக்கோரி அந்த அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், முற்றுகையில் ஈடுபட்ட கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கிராம மக்களுக்கு தேவையான அளவில் குடிநீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)