search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவனியாபுரம் அருகே பெண் என்ஜீனியர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    அவனியாபுரம் அருகே பெண் என்ஜீனியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    அவனியாபுரம் அருகே இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவனியாபுரம்:

    அவனியாபுரம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த அனுப்பானடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் சசிகலா (வயது 25). இவர் எம்.இ. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் 2 ஆண்டு காலமாக வீட்டில் இருந்து வந்தார். திடீரென இவருக்கு மனநிலை பாதிப்படைந்து மன சோர்வுடன் காணப்பட்டார்.

    சம்பவத்தன்று சசிகலா குருணை மருந்தை குடித்து விட்டு மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது குறித்து அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபாமா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×