என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ராதாபுரம் அருகே என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    ராதாபுரம் அருகே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வள்ளியூர்:

    நெல்லையை அடுத்த ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகன் சுதன் (வயது 19). இவர் வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பேலீசார் வழக்குப்பதிந்து மாணவர் சுதன் மனநிலை பாதிப்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×