search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறை, வேதாரண்யத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் தாசில்தார் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் வட்டாரதலைவர் ராஜா, அன்பழகன், நகர தலைவர்கள் சூர்யா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக நகர தலைவர் செல்வம் வரவேற்றார். இதில் தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் கடன்களை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    அதே போல் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும் அவர்களின் படகுகளை கையகப்படுத்துவதும் குறித்து மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் பத்மநாபன்.மாவட்ட தகவல்தொடர்பு துறை பொறுப்பாளர்கள் கனகசபை, மாவட்ட பொதுசெயலாளர் மிலிட்டரி கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் வடவீரப் பாண்டியன், காளிதாஸ், நகர செயலாளர்கள் நாராயணன், ராம கிருஷ்ணன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் போஸ் தலைமை வகித்தார்.

    முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் சிவப்பிரகாசம், நகரத் தலைவர் மூர்த்தி, மகளிரணி செயலாளர் செல்வராணி, சிறுபான்மை பிரிவு ரஹ்மத்துல்லா, மெய்யாரபீக் மற்றும் வட்டார நகர பொறுப் பாளர்கள் கலந்துகொண்டு விவசாயிகளிடம் பாரபட்சம் காட்டும் மோடி அரசைக் கண்டித்தும், மத்திய அரசிடம் உரிமையை மீட்கத் தயங்கும் மாநில அரசைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தட்டுபாடில்லாத குடிநீர் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    Next Story
    ×