என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

மாணவர்கள் மோதல் எதிரொலி: சட்ட கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை

காலாப்பட்டு:
புதுவை காலாப்பட்டு மாத்தூர் சாலையில் அமைந்துள்ள அரசு சட்ட கல்லூரியில் நேற்று முன்தினம் ராக்கிங் பிரச்சினை காரணமாக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 4-ம் ஆண்டு மாணவர்கள் வசந்தரராஜா, அரிகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி 4-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு, 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க கல்லூரி அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே சட்டக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை இருந்ததால் சட்ட கல்லூரிக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
