என் மலர்
செய்திகள்

பெரம்பூர் அருகே மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி
பெரம்பூர் அருகே மின்சார ரெயில் மோதி அடையாளம் தெரியாத 2 நபர்கள் பலியாகினர். இது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பூர்:
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இறப்பதற்கு முன்பு அவர் தனது பெயர் ஜனார்த்தனன் என்று மட்டும் கூறி இருக்கிறார். அவரை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதேபோல் வில்லிவாக்கம் - கொரட்டூர் இடையே தண்டவாளத்தை கடந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் மீது அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரை பற்றிய விவரம் தெரிய வில்லை.
இது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இறப்பதற்கு முன்பு அவர் தனது பெயர் ஜனார்த்தனன் என்று மட்டும் கூறி இருக்கிறார். அவரை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதேபோல் வில்லிவாக்கம் - கொரட்டூர் இடையே தண்டவாளத்தை கடந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் மீது அரக்கோணத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரை பற்றிய விவரம் தெரிய வில்லை.
இது குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






