என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் வி‌ஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை
    X

    விருதுநகரில் வி‌ஷம் குடித்து கார் டிரைவர் தற்கொலை

    விருதுநகரில் திருமணமான ஓராண்டில் மனைவி பிரிந்ததால் கார் டிரைவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் ஆனைக் குழாய் தெருவை சேர்ந்தவர் மணிகண்டகுமார் (வயது23), கார் டிரைவர். இவரது மனைவி பொங்குமாரி.

    இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் பொங்குமாரி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த மணிகண்ட குமார், வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கினார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×