என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்19 Sep 2016 9:31 AM GMT (Updated: 19 Sep 2016 9:31 AM GMT)
வில்லியனூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த அம்மா நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. உமா என்ற மனைவியும் 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட அய்யனார் சமீப காலமாக சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனை அவரது மனைவி உமா கண்டித்து வந்தார். இதுபோல் நேற்று இரவு அய்யனார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை உமா கண்டித்த போது கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உமா தூங்கி விட்டார்.
இந்த நிலையில் மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டின் முன்பு உள்ள கூரை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டையை அடுத்த அம்மா நகரை சேர்ந்தவர் அய்யனார் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. உமா என்ற மனைவியும் 1½ வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட அய்யனார் சமீப காலமாக சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார். இதனை அவரது மனைவி உமா கண்டித்து வந்தார். இதுபோல் நேற்று இரவு அய்யனார் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை உமா கண்டித்த போது கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் உமா தூங்கி விட்டார்.
இந்த நிலையில் மனைவி கண்டித்ததால் வேதனை அடைந்த அய்யனார் நள்ளிரவில் வீட்டின் முன்பு உள்ள கூரை கொட்டகையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X