என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
    X

    ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

    ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் தாமரைக்குளத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது49). இவர் நேற்று இரவு தாமரைக்குளம் சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மோட்டர் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் படுகாயம் அடைந்த மாரியம்மாளை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×