search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்?: வைகோ பேட்டி
    X

    மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்?: வைகோ பேட்டி

    ரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்? என்பது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்து உள்ளார்.
    ஆலந்தூர்:

    கோவையில் இருந்து விமானத்தில் வந்த வைகோ, சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவு நேரத்தில் பிரதமர் மோடி அறிவித்தவுடன் தமிழகத்தில் முதல் நபராக முழுமையாக வரவேற்றேன். அதன் பின்னர் மற்ற தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டனர். வரவேற்றவர்கள் தற்போது இதை முழுக்கமுழுக்க எதிர்க்கின்றனர்.

    நடைமுறையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். முன்கூட்டியே 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து இருந்தால் கருப்பு பண பேர்வழிகளுக்கு உடனடியாக தகவல் கசிந்து இருக்கும் என்பதால் அமைச்சரவைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. மற்ற கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை. பொருளாதார மாணவன் என்ற முறையில் இந்தியாவிற்கு இந்த திட்டம் தேவையானதால் வரவேற்று உள்ளேன்.

    கடந்த 1967-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது ஆபத்தானது. விபரீத விளைவுகளை ஏற்படுத்த கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×