என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்?: வைகோ பேட்டி
Byமாலை மலர்28 Nov 2016 2:25 AM GMT (Updated: 28 Nov 2016 5:36 AM GMT)
ரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்? என்பது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்து உள்ளார்.
ஆலந்தூர்:
கோவையில் இருந்து விமானத்தில் வந்த வைகோ, சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவு நேரத்தில் பிரதமர் மோடி அறிவித்தவுடன் தமிழகத்தில் முதல் நபராக முழுமையாக வரவேற்றேன். அதன் பின்னர் மற்ற தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டனர். வரவேற்றவர்கள் தற்போது இதை முழுக்கமுழுக்க எதிர்க்கின்றனர்.
நடைமுறையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். முன்கூட்டியே 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து இருந்தால் கருப்பு பண பேர்வழிகளுக்கு உடனடியாக தகவல் கசிந்து இருக்கும் என்பதால் அமைச்சரவைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. மற்ற கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை. பொருளாதார மாணவன் என்ற முறையில் இந்தியாவிற்கு இந்த திட்டம் தேவையானதால் வரவேற்று உள்ளேன்.
கடந்த 1967-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது ஆபத்தானது. விபரீத விளைவுகளை ஏற்படுத்த கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் இருந்து விமானத்தில் வந்த வைகோ, சென்னை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவு நேரத்தில் பிரதமர் மோடி அறிவித்தவுடன் தமிழகத்தில் முதல் நபராக முழுமையாக வரவேற்றேன். அதன் பின்னர் மற்ற தலைவர்கள் வரவேற்று அறிக்கை விட்டனர். வரவேற்றவர்கள் தற்போது இதை முழுக்கமுழுக்க எதிர்க்கின்றனர்.
நடைமுறையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு இருப்பது உண்மை தான். முன்கூட்டியே 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து இருந்தால் கருப்பு பண பேர்வழிகளுக்கு உடனடியாக தகவல் கசிந்து இருக்கும் என்பதால் அமைச்சரவைக்கு கூட தகவல் தெரிவிக்காமல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. மற்ற கட்சிகளை விமர்சிக்க விரும்பவில்லை. பொருளாதார மாணவன் என்ற முறையில் இந்தியாவிற்கு இந்த திட்டம் தேவையானதால் வரவேற்று உள்ளேன்.
கடந்த 1967-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தபடி பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறுவது ஆபத்தானது. விபரீத விளைவுகளை ஏற்படுத்த கூடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X