என் மலர்
செய்திகள்

வாகன சோதனை பற்றி கவலைப்படவில்லை: மு.க.ஸ்டாலின் கருத்து
சட்டசபையில் பங்கேற்று வரும் எங்களது வாகனங்களை 3-வது நாளாக சோதனை நடத்தி அனுப்புகிறார்கள். இதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் சட்டசபைக்கு வந்த உங்களிடம் இன்றும் வாகன சோதனையிடப்பட்டதா? என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
சட்டசபையில் பங்கேற்று வரும் எங்களது வாகனங்களை 3-வது நாளாக சோதனை நடத்தி அனுப்புகிறார்கள். இதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
நாட்டில் எவ்வளவோ கொலை-கொள்ளை நடக்கிறது. நேற்று கூட 3 கொலை நடந்துள்ளது. அதுவும் பெண்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீசார் சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்களிடம் இப்படி சோதனை செய்வது இந்த ஆட்சியின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் சட்டசபைக்கு வந்த உங்களிடம் இன்றும் வாகன சோதனையிடப்பட்டதா? என்று நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
சட்டசபையில் பங்கேற்று வரும் எங்களது வாகனங்களை 3-வது நாளாக சோதனை நடத்தி அனுப்புகிறார்கள். இதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
நாட்டில் எவ்வளவோ கொலை-கொள்ளை நடக்கிறது. நேற்று கூட 3 கொலை நடந்துள்ளது. அதுவும் பெண்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீசார் சட்டசபைக்கு வரும் எம்.எல்.ஏ.க்களிடம் இப்படி சோதனை செய்வது இந்த ஆட்சியின் கையாலாகாதனத்தை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story