என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் சப்பர திருவிழா
Byமாலை மலர்9 Aug 2022 6:07 AM GMT
- பொதுமக்கள் தேரை வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர்.
- திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து தினமும் இரவு சிம்மம், அன்னம், கமலம், யானை, கிளி, விருஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூப்பல்லக்கு, சப்பரம் ஆகியவற்றிலும் சாமி எழுந்தருளி வீதி உலா வந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று மாலை 4 மணிக்கு அம்மன் சப்பரத்திற்கு எழுந்தருளினார்.இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் சப்பரத்தை சன்னதி புதுக்குளம் கிராமத்தினர் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து 4 ரத வீதிகளிலும் இழுத்து வந்தனர். திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X