என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருவனந்தபுரம் மாங்குளம் பராசக்தி தேவி கோவிலில் மகா காலேஸ்வர யாகம் தொடங்கியது
- இந்த வழிபாடு மிக சிறப்பு வாய்ந்த வழிபாடாக பக்தர்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
- மகா கலேஸ்வர யாக பூஜைகள் 16-ந்தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.
கேரள மாநில தலைநகரமான திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த வசீகரம் நிறைந்த ஆதிபராசக்தி கோவிலான மாங்குளம் பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இந்த கோவிலில், தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் நடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த வழிபாடு மிக சிறப்பு வாய்ந்த வழிபாடாக பக்தர்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.
நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து விடுதலை பெறவும், சூனியம் அகலவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் இந்த கோவிலுக்கு வந்து தேவியை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஆதிபராசக்தி தேவியையும், பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இந்த கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பு வாய்ந்தவையாகும்.
ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இந்த கோவிலில் மகா காலேஸ்வரயாகம் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) முதல் நடந்து வருகிறது. இந்த யாகமானது தொடர்ந்து 16-ந் தேதி வரை 11 நாட்கள் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு புன்னியாக பூஜைக்கு பின் ஆழிமலை மகாதேவர் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட அரணியில் இருந்து எடுத்த அக்கினி பகர்ந்து மகா காலேஸ்வர யாகம் தொடங்கியது. தொடர்ந்து பரசுராம அனுமதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், 9 மணிக்கு 11 மடங்களின் சன்னியாசிகள் முன்னிலையில் மகாயதி பூஜை நடந்தது. நேற்று நடைபெற்ற பஸ்மாரதி பூஜைக்கு கிருஷ்ணானந்த காளிதாஸ் சுவாமிகள் தலைமை தாங்கினார்
நாட்டில் உள்ள 12 ஜோதிர்லிங்க சிவன் கோவில்களின் முக்கிய பூசாரிகள், முகேஸ்வர சிவன் கோவில் யாக பண்டிதர்கள், பைரவர் கோவிலின் முக்கிய புரோகிதர்கள், மூகாம்பிகை கோவிலின் முதன்மை தந்திரி ஆகியோர் இந்த மகா காலேஸ்வர யாகம் யாகத்தை நடத்துகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை யாக பூஜைகள், பல்வேறு பூஜைகள், மாலை 6.45 மணி முதல் மகா காலேஸ்வர திருநீற்று பூஜை நடைபெறுகிறது.
யாகத்தின் 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை வேதிகா பூஜை, வேதிகார்ச்சனை உள்பட பல்வேறு பூஜைகள், பிற்பகல் 3 மணி முதல் 6.30 வரை இளநீர் அபிஷேம், பால் அபிஷேகம், லிங்காபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 13-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் அகோர மகா சனீஸ்வர யாகம், மகா மண்டலேஸ்வர் தேவேந்தர் தலைமையில் நடக்கிறது.
விழாவில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் திருநீற்று சிறப்பு பூஜையில் நேபாளத்தை சேர்ந்த புத்தமத உலக அமைதிக்கான தலைமை அதிகாரி லாமா கியாச்சோ ரிம்போச்சே கலந்து கொள்கிறார். மகா கலேஸ்வர யாக பூஜைகள் 16-ந்தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.
மகா காலேஸ்வர யாக பூஜைகளுக்கான ஏற்பாடுகளை யாக பிரம்மன் ஆனந்த் நாயர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறர்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்