search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா: 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்
    X

    ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா: 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

    • விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    • 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரி எடுத்தனர்.

    சீர்காழி தென்பாதியில் கருப்பண்ணசுவாமி, ஏழைகாத்தஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை உப்பனாற்றில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதனைத்தொடர்ந்து நேற்று கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரிகளை தலையில் சுமந்து திட்டை ரோடு, தென்பாதி வழியாக உப்பனாற்றை வந்தடைந்தனர்.

    பின்னர் ஆற்றில் முளைப்பாரியை விட்டனர். தொடர்ந்து ஏழு கன்னி சிறப்பு வழிபாடு நடந்தது.

    Next Story
    ×