என் மலர்
ஆன்மிகம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தியாகராஜசாமி ருத்ரபாத தரிசனம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தியாகராஜசாமி ருத்ரபாத தரிசனம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி தியாகராஜசாமி, அகத்திய முனிவருக்கு ருத்ரபாத தரிசனம் கொடுத்து தனது இருப்பிடத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக உற்சவத்தையொட்டி தியாகராஜசாமி, அகத்திய முனிவருக்கு ருத்ரபாத தரிசனம் கொடுத்து தனது இருப்பிடத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஹம்ச நடனம் புவனி விடங்க தியாகராஜர் மூலஸ்தானத்தில் இருந்து தலத்தார்கள் கலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன், கதாகரன் உள்பட பக்தகுழுவினரால் ஹம்ச நடனத்துடன் தூக்கி வரப்பட்டு வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
பின்னர் சாமிக்கு பூஜை நடந்தது.பின்னர் தியாகராஜ பெருமான் தனது ருத்ரபாதத்தை அகஸ்திய முனிவருக்கும், பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.
இதை தொடர்ந்து தியாகராஜர் மீண்டும் ஹம்ச நடனத்துடன் (ஹம்ச நடனம் என்பது அன்னப் பறவை போல் அசைந்தாடும் காட்சி) தனது இருப்பிடத்திற்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் சாமிக்கு பூஜை நடந்தது.பின்னர் தியாகராஜ பெருமான் தனது ருத்ரபாதத்தை அகஸ்திய முனிவருக்கும், பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார்.
இதை தொடர்ந்து தியாகராஜர் மீண்டும் ஹம்ச நடனத்துடன் (ஹம்ச நடனம் என்பது அன்னப் பறவை போல் அசைந்தாடும் காட்சி) தனது இருப்பிடத்திற்கு சென்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






